வில்லியம் ஃபாக்னர் 1897 செப்டம்பர் 25ஆம் தேதி மிஸிஸிப்பியில்
ஆக்ஸ்போர்டுக்கு அருகே உள்ள நியூ ஆல்பனியில் பிறந்தவர். இளமையிலேயே மிஸிஸிபி சர்வகலா சாலையைவிட்டு கனடாவின் விமானப்படையில் சேர்ந்தார். ஒரு விமான விபத்தில் சிக்கி காயமடைந்து அமெரிக்காவிற்குத் திரும்பினார். நியூ ஆர்லியன்ஸுக்கு சென்று ஷெர்வுட் ஆண்டர்சனுடன் தங்கி சில கட்டுரைகள் எழுதத்தொடங்கினார்.
நியூயார்க்கிலும் ஆக்ஸ்போர்டிலும் சிறிது காலம் சுற்றுப்பிரயாணம் செய்து
பின் ஆக்ஸ்போர்டுக்கு திரும்பி ஒரு இயந்திர சாலையில் இரவு வேளைகளில் கரி அள்ளும் வேலையில் அமர்ந்தார். இங்குதான் தம்முடைய சிறந்த நாவல்களை திருத்தி எழுதினார். 1931ல் எழுத்து மூலமே வாழ்க்கை நடத்துவது அவருக்கு சாத்தியமாயிற்று. 1939ல் அவருக்கு ஓ. ஹென்றி ஞாபகார்த்தப் பரிசு கிடைத்தது. தேசிய கலை இலக்கிய கழகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். புது அமெரிக்க நாவல் இலக்கியத்திற்கு அவர் செய்த சேவைக்காக அவருக்கு 1949ல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இதன் பிறகு உலகத்தின் கவனம் அவருடைய எழுத்துகளின் மீது திரும்பியது.
(“வில்லியம் ஃபாக்னர் – சில கதைகள்” என்ற நூலிலிருந்து : வ.உ.சி நூலக வெளியீடு)
பின்னூட்டமொன்றை இடுக
Comments feed for this article