1874ல் அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ பிரதேசத்தில் பிறந்தவர். பதினோரு வயதில் தந்தையின் மறைவு அவரை பாதித்தது. மிக இளமையிலேயே சக பெண் ஒருவரை (காதல்வயப்பட்டு) மணந்துகொண்டார். 26வது வயதில் அவர் நியு இங்கிலாந்துப் பண்ணைகளின் விவசாயி – கவிஞன் என்கிற பாத்திரத்தின் தொடக்கமாக, நியு ஹாம்ப்ஷயரின் சிறியதொரு பண்ணையில் தன்னை நிறுத்திக்கொண்டார். அவரின் குடும்பத்தினரின் மரபணுக்களில் ஏதோ குறைபாடிருந்தது. நாற்பதாண்டுகால ஆழமும், வேட்கையும் கொண்டிருந்த திருமணவாழ்வு, அவரின் மனைவியின் மறைவிற்குப் பின் திரு ஃபிராஸ்ட்டை இங்கிலாந்து பயணிக்கச் செய்தது. அங்கு அவரது முதல் தொகுப்பு “A Boy’s Will” வெளியாகி, விமர்சன ரீதியிலான வெற்றிகண்டது. எஸ்ரா பவுண்டின் கவனமும் இவரின் மேல் படிந்தது.
1914ல் இரண்டாவது தொகுதி “North of Boston” மிகப்பெரும் வெற்றியை ஈட்டித் தந்தது. அடுத்த ஆண்டு நாடு திரும்பினார். மிக்சிகன் – அம்ஹெர்ஸ்ட் பலகலைக்கழகங்களில் பேராசிரியராக விளங்கினார். கதே, தாமர் ஹார்டியைவிடவும் நீண்ட ஆயுள் கொண்டிருந்த அவர், தன் இலக்கியத்தரங்களைக் காப்பாற்றினார்.அதிலே அவர் எளிமையாயும், உன்னதமாகவும் இருந்தார். நகர்கின்ற மணல் திட்டில் கீழ்மட்டத்தில் எங்கோ ஓரிடத்தில் திடமான பாறை காணப்பட்டது. அவர் மடியும் மட்டும் அது நீடித்தது. அதுபோலவே, ஒரு போதும் திருப்தியுறாத அதீத வேட்கையும் இருந்தது. மாபெரும் கவிதைகள் எழுத விரும்பினார். டி.எஸ்.எலியட் பெற்றிருந்த அங்கீகாரம் தனக்கு வேண்டுமென விரும்பினார். வரலாற்றில் யாருக்கும் கிடைக்காத அறுதி அங்கீகாரம் எலியட்டுக்கு கிடைத்திருந்தது. எலியட் நோபல் பரிசை வென்றிருந்தார். எனவே 1960ல் நோபல் பரிசு தனக்கு கிட்டவில்லையென மிகவும் வருந்தினார், பிற்பாடு கலகலப்பாகிவிட்டார். அவரது 88ஆவது வயது வரையிலும் அவரை கௌரவங்களும், பதக்கங்களும் தேடிவந்தவண்ணமிருந்தன. நான்கு புலிட்ஸர் பரிசுகள் கிடைத்திருந்தன. ஆனால் நோபல் பரிசை இன்னும் வென்றபாடில்லை. 1963ல் அவரது பெயர் நோபல் பரிசுக்காக ராபர்ட் க்ரேவ்ஸ் முன்மொழிந்திருந்த கடிதத்தை அவரது நீண்டகால நண்பர் அண்டர் மேயர் வாசித்துக் காட்டினார். அதன்பின் ஒருவாரம் கழித்து இறந்துபோனார் ஃபிராஸ்ட்.
“Variety of men” (C.P. Snow / Mc Millen, 1967 – நூலிருந்து)
ராபர்ட் ஃபிராஸ்ட் கவிதைகள்
மொழியாக்கம் : சா.தேவதாஸ்
போகாத பாதை
மஞ்சள் வனமொன்றில் இருபாதைகள் பிரிகின்றன
இரண்டிலும் போகமுடியாதது வருந்த வைக்கிறது
ஒரு பயணியான நான் நீண்டநேரம் நின்று
என்னால் முடிந்தமட்டும் ஒன்றையொன்று உற்று நோக்கினேன்.
ஒன்று புதரில் எங்கே வளைந்து திரும்புகிறதென்று
மற்றொன்று சீரியதாய் இருந்தது இன்னும்
தடங்கள் படியாது புல் நிறைந்ததாயும்
அக்காலையில் இரண்டும் சமமாகக் கிடந்தன.
எந்தக் காலடியும் பதிந்திராத இவைகளில்
முதல் பாதையை இன்னொரு தினத்துக்கு ஒதுக்கினேன்!
ஒருபாதை இன்னொன்றாகக் கிளைத்துச் செல்வதறிந்ததும்
திரும்பி வருவேனா என்று சந்தேகித்தேன்.
இதனை பெருமூச்செறிய கூறிக்கொண்டிருப்பேன்
பல யுகங்கள் கழித்தும்
வனமொன்றில் இருபாதைகள் பிரிந்தன, நான்
இதுவரை போகாத பாதையைத் தெரிவு செய்தேன்.
அதுதான் உண்டாக்கியது எல்லா வித்தியாசங்களையும்.
*********************************
தொலைவாகவும் இயலாது ஆழமாகவும் இயலாது
கடற்கரை ஓரமாய் உள்ளவர்கள்
திரும்பி ஒரே திசையில் நோக்குகின்றனர் எல்லோருமாக.
தம் முதுகைத் திருப்புகின்றனர் நிலத்திற்கு
நாளெல்லாம் நோக்குகின்றனர் கடலினை.
கப்பலொன்று தன் உடற்பாகத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறது
எவ்வளவு முடியுமோ அவ்வளவு
ஈரத்தரை பிரதிபலிக்கிறது புல்போல
நிற்கும் கடற்காகத்தை.நிலம் வேறுபடக்கூடும் மேலும்
ஆனால் நிஜம் எதுவாயினும்
நீர் வந்து சேர்கிறது கரைக்கு
மக்கள் பார்க்கின்றனர் கடலினைஅவர்களால் தொலைவாக பார்க்க முடியாது
அவர்களால் ஆழமாகப் பார்க்க முடியாது
ஆனாலும் எப்போதேனும் தடையிருந்தா
அவர்களின் கவனிப்புக்கு.
*********************************
பனிப்பாலைப் பகுதிகள்
பனி வீழ்வும் இரவு கவிழ்தலும் விரைவாக
கடந்த காலத்துள் போய்க்கொண்டிருந்ததாக நான் கண்ட வயலில்
தரை அநேகமாய் பனியால் மூடுண்டது மிருதுவாய்
ஆனாலும் தலைகாட்டும் சில புல்வண்டுகள்
அதனைச் சூழ்ந்திருந்த வனங்கள்
கொண்டிருந்தன அவற்றினுடைவைகளை
விலங்குகளெல்லாம் அடைந்து கிடக்கும் தம் குகைகளில்
எண்ணிப்பார்க்க மறந்தவனாய் இருக்கின்றேன்
நானறியாதபடி என்னை உள்ளடக்கிக் கொள்ளும் தனிமை.தனித்திருக்கும் அத்தனிமை
தான் தணிவதற்குள் மேலும் தனிமை கொள்லும்
இருளார்ந்த பனியின் வெண்விரிப்பாக
உணர்வு பலமற்று, வெளிக்காட்ட ஏதுமின்றி.வெற்று வெளிகளில் அவை கலவரப்படுத்த இயலாது என்னை
மானுட இனம் இல்லாத நட்சத்திரங்களுக்கிடையே
என் வீட்டருகே கொண்டிருக்கிறேன் அதனை
இப்பாலைவனப் பகுதிகளாலேயே என்னைக் கலவரப்படுத்த.
*********************************
சூது
பருத்த வெண்சிலந்தி ஒன்றைக் கண்டேன்
வெள்ளை மூலிகைச் செடிமேல் பூச்சியொன்றை கவ்வியபடி
கெட்டியான வெண்பட்டுத் துணிபோல
மரணம் மற்றும் நோயின் பாத்திரங்கள்
ஆயத்தமாயுள்ளன காலை நாடகத்தை ஆரம்பிக்க
சூனியக்காரியின் கஷாயத்தில் சேர்ந்திருப்பவைபோல
ஒரு பனித்துளி சிந்தி, மலர் நீர்க் குமிழியாக
மற்றும் காகிதப் பருந்தென தூக்கிச் செல்லப்படும் உயிரற்ற சிறகுகள்.வெண்மையாய் இருப்பதற்கும்
பாதையோரத்து நீலத்திற்கும் மற்றும் மாசற்ற மூலிகைக்கும்
அம்மலருக்கும் என்ன சம்பந்தம்?
உச்சியில் சிலந்தியை நிறுத்தி
அப்புறம் இரவில் வெண்பூச்சியை அங்கு செல்ல வைத்தது எது?
திகைப்புறச் செய்யும் இருளின் சூதன்றி வேறென்ன?
எவ்வளவு அற்பமானதெனினும் கட்டுப்படுத்தும் சூது.
ஒப்பீடுகள்:
1. http://www.wikipedia.org
2. Princeton University Library Website
3. புது எழுத்து சிற்றிதழ்
5 பின்னூட்டங்கள்
Comments feed for this article
மார்ச் 8, 2007 இல் 9:52 பிப
சிறில் அலெக்ஸ்
ரெம்ப நல்ல சேவை உங்களது. ஆங்கிலத்தில் படித்த The road less travelled(?) தமிழில் படிக்க அதே இனிமையைத் தருகிறது.
தொடருங்கள் தொடர்கிறேன்.
🙂
மார்ச் 8, 2007 இல் 10:55 பிப
babble
படிப்பவர் அனைவரையும் தன் பால் இழுக்கும் எளிமையான எழுத்து. அற்புதமான கவிதைகள். “The road not taken” நான் விரும்பி படித்த, படிக்கும் கவிதை. பல பெருந்தலைகள் அவரின் “Passing by woods on snowy evenings”-ஐ கோட் செய்துள்ளார்கள்
மார்ச் 9, 2007 இல் 12:28 முப
முபாரக்
நீண்ட காலமாய் வாசிக்கவேண்டும் என நினைத்திருந்த ஒரு மகத்தான கவிஞனைப் பற்றி எழுதியதற்கு மிக்க நன்றிகள்.
“காடு ஒன்றினில் இரண்டு பாதைகள்
கருதியே தேர்ந்தேன் ஒரு பாதையினை
யாரும் நடக்காத பாதை அதுவாம்” என்று பல மேடைகளில் மறைந்த திரு.வலம்புரி ஜான் அவர்கள் அடிக்கடிச் சொல்லக்கேட்டு கிறங்கியிருக்கிறேன்.
இதைப்போலவே ஒன்று சமீபத்தில் படித்தது. திரு.தங்கமணியின் பதிவில்
நான் நடக்கிறேன். எதையும் அடைவதற்காக அல்ல; நடப்பதற்காகவே
சிறப்பான எழுத்து தங்களுடையது. வாழ்த்துக்கள்
நிறைய எழுதுங்கள். உங்களைப் போன்றோர் நிறைய எழுதவேண்டும் என்பதே என்போன்ற வாசிப்புப் பித்தர்களின் பிரியம்
சினேகபூர்வம்,
முபாரக்
மார்ச் 9, 2007 இல் 3:18 முப
நம்பி
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! – பாரதி.
— சேர்க்கும் உங்களுக்கு எனது வணக்கங்கள்!
Miles to go- இருந்தாலும் இது போன்ற எழுத்துக்கள்
நீண்ட பயணத்தின் சுமையை குறைக்கும் பெருமைக்கு உரியன!
நன்றியும் வாழ்த்துக்களும்.
அன்புடன்,
நம்பி.பா.
ஒக்ரோபர் 3, 2007 இல் 12:31 பிப
Jayalakshmi
Thanks for introducing such sensitive poets and writers for ordinary people like me. I enjoyed your blog. I am glad I stumbled upon your writing. Excellant.
Thanks once again