கடலின் கவிதைக்கு
கற்றலின் அவசியமில்லை
சாத்தியமான வெற்றிடம்
துளிமௌனத்துடன் அமர
கடலெழுதுகிறது
மூளைக்குள் கவிதையை

——————————————-

சமுத்திரத்திற்கான
வாகசைவுகளோடு
தொட்டிநீர் மீன்கள்

– பாம்பாட்டி சித்தன்